நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அடுத்த மொளசி தபால் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கி பேசியுள்ளார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு அரசு வருவாய் பங்கீடு முறையை ரத்து செய்துவிட்டு 2022 -2023 ஆம் ஆண்டு மாநில அரசு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.

மேலும் அதிகரித்து வரும் கரும்பு கூலி கரும்பு வெட்டு கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல் நிர்ணயிக்கப்படும் வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே கொடுத்துவிட்டு கரும்பு கிரைய பணத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.