தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்த ஆளுநர் ரவி விளக்கம் கேட்டிருந்த நிலையில், அதற்கு திமுக அரசு அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதில் பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த போது ஆளுநர்கள் இதுபோன்று விளக்கம் கேட்டிருந்தார்களா.? பதவிக்குரிய வேலையை தொடர்ந்து சீரழிக்கும் வேலையை செய்து வரும் ஆளுநர் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் ஆளுநர் விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால் அண்ணாமலை போன்று பாஜக கட்சியின் தலைவர் ஆகிவிடலாம் என்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.