தமிழகத்தில் அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மே 19ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான கால அவகாசம் தற்போது மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் நுழைவு கட்டணம் ஆண்டுக்கு 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்