பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வின்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிற்கு வருகை புரிந்த போது அவருக்கு பாஜக கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடர்ந்து கொச்சி வாட்டர் மெட்ரோ சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.