தற்போது உலகெங்கிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரம் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், அதனால் ஏற்படும் விளைவுகளும் பெருமளவில் இருக்கிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து சிதறியதில் 8 வயது சிறுமி ஆதித்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு செல்போன் வெடித்து சிதறியதால் இரவு 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.