டெல்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக கட்சியின் எம்.பியும், WFI தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதாவது இந்திய மல்யுத்தம் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யாததற்கு டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்கு பதிவு செய்யாத டெல்லி காவல்துறையின் அலட்சியத்திற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.