அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்திய பயணி ஒருவர் அளவுக்கு அதிகமான மது போதையில் அருகில் இருந்த சக பயணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு பயணி தூங்கிக் கொண்டிருந்தபோது மது போதையில் இருந்த இந்திய பயணி அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதைப் பார்த்து பயணி அலற உடனே விமான ஊழியர்கள் சிறுநீர் கழித்த போதை ஆசாமியை தடுத்து நிறுத்தியுள்ளனர். விமானம் டெல்லியில் இறங்கியதும் போலீசார் சிறுநீர் கழித்த நபரை கைது செய்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த நபரின் விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. ஏற்கனவே இதுபோன்று இரண்டு சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் தற்போது மீண்டும் விமானத்தில் சக பயணம் மீது பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.