மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை சமீபத்தில் நான்கு சதவீதம் உயர்த்திய நிலையில் இந்த ஆண்டு ஜூலையில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான தற்போதைய அகலவிலைப்படி விகிதம் 42 சதவீதமாக உள்ளது. அடுத்த ஊதிய உயர்வுக்கான அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அகல விலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் தொகையாகும். இது இந்தியாவில் உயரும் விலைவாசிக்கு ஏற்றவாறு வழங்கப்படுகின்றது. தற்போது வெளியாகி உள்ள இந்த செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.