புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும் அவற்றை தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்று தூத்துக்குடி மாவட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவைக்கு விமான சேவை, புதுச்சேரி- இலங்கை இடையே கப்பல் சேவை என பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்துள்ளார் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.