ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,575 வாக்குகள் வித்தியாசம் பெற்றார். இ

அதே நேரம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக டெபாசிட் இழந்ததோடு, சொற்ப வாக்குகளே பெற்றது. இந்நிலையில் இதுகுறித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியதாவது, தேமுதிக பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதோடு ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகளை கண்டு தேமுதிகவினர் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள் என்று ஆறுதலும் கூறியுள்ளார்.