கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயவேல்(34) அப்பகுதியில் இருக்கும் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயவேலுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஜெயவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.