கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் காலபைரவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சங்காபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் 64 காலபைரவர்களுக்கு மூலமந்திரங்கள் வாசித்து 108 மூலிகைப் பொருட்களால் யாகம் வளர்க்கப்பட்டது. இதனையடுத்து 108 வலம்புரி சங்காபிஷேகம் , கலசாபிஷேகம், சிறப்பாக அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.