கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளித்தலை அருகே அய்யனார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. புத்தகப் பையுடன் தேங்கி நிற்கும் மழை நீரில் மாணவர்கள் நடந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்துடன் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.