தூத்துக்குடி மாவட்ட புதிய துறைமுகம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் புதிய கட்டிடம் கட்டி வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் இரண்டு செல்போன்கள் திருடு போனது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் முத்தையாபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் செல்போன்களை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.