ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அந்தந்த தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் புது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை போடுதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து மின்னணு குடும்ப அட்டைகளில் இருக்கும் குடும்ப தலைவரின் புகைப்படம் திருத்தி பதிவேற்றம் செய்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார்கள் அளிக்கப்பட்டது. நியாய விலை கடைகளுக்கு செல்ல இயலாத மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்ட பயனாளர்களுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குறைகள் குறித்து மனு அளித்தனர்.