கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட கோழியூர் கிழக்குத் தெருவில் பொதுமக்கள் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகையில் இங்குள்ள சாலைகள் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மேடும், பள்ளமாக இருப்பதால் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த சாலை விபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கிறது. எனவே இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், அவசரகால ஊர்திகள் இந்த சாலையை பயன்படுத்தாமல் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதாகை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.