சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் உள்ள சதுர்வேதமங்கலம் ஆத்ம நாயகி அம்பாள் கோவில் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இறைவன், இறைவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. இந்த திருக்கல்யாணத்தை கோவில் சிவாச்சாரியார் மற்றும் ஓதுவார் பூஜ்ஜகர்கள் குழுவினர் நடத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் இன்று சமணர்களுக்கு சாப விமோசனம் ஏற்படுத்தும் கள்வன் திருவிழா நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வருகிற மார்ச் ஐந்தாம் தேதி மாலை 3:30 மணியளவில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில் தேர் வடம் பிடித்து தேர் 4 வீராத வீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் தீர்த்தவாரி உற்சவ விழா நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவில் 10வது நாளான தீர்த்தவாரியில் மாபெரும் புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெறுகிறது.