கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாதிரிக்குப்பம் திடல் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் ஆக்சிலேட்டர் ரேஸ் ஆனதால் ஆட்டோவில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோ இன்ஜினை அணைத்து ஜெயபாலை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.