கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறேன் எனக்கு கணவரும், குழந்தைகளும் இருக்கின்றனர். நான் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் பார்த்தசாரதி என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்ட பார்த்தசாரதி சம்பளத்தில் 3000 ரூபாய் கூடுதலாக தருவதாக தெரிவித்தார். மேலும் எனது ஆசைக்கு இணங்குமாறு அவர் அழைத்ததால் பார்த்தசாரதியை கண்டித்து இணைப்பை துண்டித்தேன். ஆனாலும் தொடர்ந்து அவர் என்னை தொந்தரவு செய்து, ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புகிறார் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.