நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி கடந்த 20 ஆண்டுகளாக  நகர தெரு  வியாபார தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நகர தெரு வியாபார தொழிலாளர்கள் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக, பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் மாவட்ட கட்டுமான சங்க செயலாள கிருஷ்ணசாமி, ரைசிங் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செங்கோட்டையன், ராசிபுரம் கட்டுமான சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர். அதன் பின் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நகராட்சி தலைவர் கவிதா சங்கர், ஆணையாளர் அசோக் குமார் போன்றோரிடம் மனுக்களை அளித்துள்ளனர்.