இரண்டு ஆண்டு காலமாக எத்தியோப்பியா நாட்டில் மழை பெய்யாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் பல துயரங்களை சந்தித்து வருகின்றனர். சில விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பறிக் கொடுத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதற்கு ஏதும் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.