அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் போன்று தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் எம்ஜிஆரை போன்று எடப்பாடி பழனிச்சாமி தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து இருந்தது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு ஆணவத்தோடு இன்று சிலர் கட்சியை கைப்பற்றி விட்டோம் என்று நடந்து கொண்டால், வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி தான் கிடைக்கும் என்றும்  எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும் ஏப்ரல் 14-ஆம் தேதி மாபெரும் மாநாடு நடைபெற இருப்பதாகவும், பிரதமரை சந்தித்து பேச நேரம் கிடைத்தால் நிச்சயமாக அவரை சந்தித்து பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.