கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் திறந்து வைத்துள்ளார். அன்றைய தினம் பூட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் வருவாய் ஆய்வாளரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை விட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.