கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டராக ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆறுமுகத்திற்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமி ஊத்துக்குளியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் குழந்தை பிறந்த 6 மாதங்கள் ஆகியும் ஆறுமுகம் குழந்தையையும், மகாலட்சுமியும் பார்க்க வரவில்லை. இதனால் மன உளைச்சலில் மகாலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மகாலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகாலட்சுமியின் செல்போனை ஆய்வு செய்தனர்.

அப்போது மகாலட்சுமி ஒரு வீடியோ பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்தது. அதில் நான் என்ன செய்தாலும் எனது கணவர் குற்றம் கண்டுபிடிக்கிறார். எனக்கு நிம்மதியே இல்லை குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு போ என அவர் என்னிடம் கூறினார் இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள். என மகாலட்சுமி வீடியோவில் உருக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.