ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்ததை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பழனிச்சாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இந்த படுதோல்வி. அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்துச் சென்ற நம்பிக்கை துரோகிக்கு என்னுடைய கண்டனங்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதிமுக கட்சி வலுவிழந்துள்ளது என்பதை தான் இந்த இடைத்தேர்தல் முடிவு காண்பிக்கிறது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அதிமுகவுக்காக உழைத்தவர்களை உதறி தள்ளியதுதான். 67,000 வாக்குகள் வித்தியாசம் என்பது அதிமுக வலுவிழந்து விட்டது என்பதை தெளிவாக காண்பிக்கிறது. மேலும் மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.