பாலியல் தொல்லையால் 18 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கியுள்ளது. திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் போக்சோ சட்டத்தில் கைதான நிலையில் சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.