காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வழியாக சென்னை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சேத்துப்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏபி சத்திரம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பேருந்து ஓட்டுநர் சடன் பிரேக் பிடித்தார்.

இதனால் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.