மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரிலிருந்து பெங்களூரு நோக்கி 6இ 716 என்ற இண்டிகோ விமானமானது வந்துகொண்டிருந்தது. இதையடுத்து விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும் போது, விமான கழிவறையை ஊழியர் சோதனை செய்துள்ளார். இந்நிலையில் குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது. உடனே அதை தண்ணீர் ஊற்றி ஊழியர் அணைத்துள்ளார்.

கொல்கத்தாவின் சீல்டா பகுதியை சேர்ந்த பிரியங்கா சக்ரவர்த்தி என்ற இளம்பெண் தான் விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்த பின், எரிந்த நிலையிலான மீதமுள்ள சிகரெட் துண்டை போட்டு போயுள்ளார் என சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்து இறங்கியதும் பிரியங்காவை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அந்த இளம் பெண்ணை காவலுக்கு அழைத்து சென்றனர்.