கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு மஞ்சத்தோப்பு காலணியில் கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணனின் மனைவி இரண்டு மகன்களுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் கண்ணன் தனது மகள் ஷோபா(16) தாய், தந்தையுடன் துவரங்காடு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் எட்டாம் வகுப்பு வரை படித்த ஷோபா 3 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனால் அவரை பள்ளியில் சேர்ப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை கண்ணன் செய்து வந்துள்ளார். பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்த ஷோபா தனது வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷோபாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.