துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை துருக்கி நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கிக்கு இந்தியா மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிலநடுக்க நிவாரண பொருட்களாக அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கி அனுப்பிய வெள்ள நிவாரண பொருட்கள் மீது பாகிஸ்தான் என்ற பெயரிலான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு துருக்கிக்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக வேதனையான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் துருக்கியை பாகிஸ்தான் ஏதோ ஒரு வகையில் பழி தீர்த்து கொண்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.