ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து பதில் கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜெயலலிதா ஆதரித்த திட்டம் ஆகும். அதனை அதிமுக என்றைக்கும் ஆதரிக்கும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.