சேலம் சிறுவாச்சூர் கிராமத்தில் அதிமுக சார்பாக இன்று மாட்டு பொங்கல் விழா நடந்தது. இவற்றில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவங்கி வைத்தார். இந்நிலையில் திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய நிலை உள்ளது என இபிஎஸ் காட்டம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, வெறும் விளம்பரம் மட்டும்தான். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தருவதாக கூறினர். ஆனால்  அதை இதுவரை தரவில்லை. மின்கட்டணம் 53% உயர்த்தி விட்டனர். பால் விலை, சொத்துவரி உயர்த்தியும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று விமர்சித்தார்.