ஓ பன்னீர்செல்வம் பல்வேறு துரோக செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பரம்பரை எதிரி, தீய சக்தி திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி பன்னீர்செல்வம் என்று கூறியுள்ளார்.

அதிமுக இயக்கத்தை திமுகவிடம் அடகு வைக்கவும் தனித்தன்மையை சீர்குலைக்கவும் முயன்றே  ஜீரோ பன்னீர்செல்வமிடமிருந்து கழகத்தை மீட்டெடுத்து கழகத்தின் பெருமையை காத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் கூறியுள்ளார். வெறும் நான்கு பேரை மட்டுமே வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியின் தனித்தன்மையை சீர்குலைக்க முயன்ற ஓ பன்னீர்செல்வம் தன்நிலை அறியாமல் தன்னை மறந்து தாறுமாறாக உலறி வருகின்றார் என்றும் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.