தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடுவதை உடனடியாக நிறுத்தும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்தகைய விளம்பரங்களை நிறுத்தும்படி ஊடகங்கள், செய்தித்தாள்கள், பிற ஆன்லைன் தளங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. விளம்பரம் வாயிலாக சூதாட்டத்தை ஊக்குவிப்பதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.