நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா 4,000, 5,000 ஆக இருந்த நிலையில் இன்று 6,000 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 6,050 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 13 பேர் இறந்த நிலையில், சிகிச்சை எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்துள்ளது.