கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் வீரனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே இருக்கும் மரத்தில் 35 மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் சாதப்பாடி தெற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பது தெரியவந்தது. இவர் எம்.ஏ, பி.எட் படித்து முடித்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலை கிடைக்காததால் சத்தியமூர்த்தி மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.