திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பெட்டி கடைகளில் சோதனை நடத்திய போது புகையிலை பொருட்களை விற்பனை செய்தது உறுதியானது. இதனால் கார்த்திக், நாகேந்திரன் ஆகிய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 600 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.