கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.