கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் முனிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரூபா வெளியே சென்ற நேரத்தில் முனிகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த ரூபா தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனிகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முனிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.