தென்காசி மாவட்டத்தில் உள்ள சிங்கிலிபட்டி சந்தை தெருவில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். இந்நிலையில் மானூர் அருகே சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் டென்சிங் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கார்த்திக் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.