திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செம்பூரில் பிச்சைக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளராக இருக்கிறார். நேற்று வேலை காரணமாக பிச்சைக்கண்ணு திருவண்ணாமலைக்கு காரில் சென்றார். பின்னர் வேலைகள் முடிந்தும் காரில் வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கோழி புலியூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி நிலத்தில் பாய்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சை கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பிச்சைக்கண்ணுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.