கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் காவிரி வீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பூரணி தனது வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூரணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பூரணி 25 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பூரணியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.