சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அலைபாயுதே படத்தின் பாணியில் வாழ்ந்து வந்த இளம் பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கோகிலா வாணி என்ற கல்லூரி மாணவியும் முரளி கிருஷ்ணா என்ற ஐடி கம்பெனி ஊழியரும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கோகிலா வாணிக்கு கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்ட கள்ளக்காதலாக மாறிய நிலையில் இது முரளி கிருஷ்ணாவுக்கு தெரிய வர கோகிலாவணியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.