தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. அருண்குமார் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமருந்த 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.