திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் வருகிற 23-ஆம் தேதி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். மேலும் மனு அளிக்கும் போது தங்கள் அடையாள அட்டை நகலினை இணைத்துக் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.