திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ரவீந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த அங்காடியில் சூர்யா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா லாரி வாங்க வேண்டும் எனக் கூறி ரவீந்திரனிடம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

ஆனால் வாங்கிய பணத்தை சூர்யா திரும்பி கொடுக்கவில்லை. இதேபோல் பல்பொருள் அங்காடியில் வேலை பார்க்கும் பெண்களிடம் 1 லட்ச ரூபாய் பணம், 4 பவுன் தங்க நகையை வாங்கி அடகு வைத்து மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.