மதுரை மாவட்டத்திலுள்ள பிபி குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி ஸ்ரீகாந்த் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். நேற்று மதுரை தல்லாகுளம் உலக தமிழ் சங்கம் பகுதியில் ஸ்ரீகாந்த் கையில் வாளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை கைது செய்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீகாந்த் ஆடம்பரமாக செலவு செய்வதற்கு தனியாக நடந்து செல்பவர்களிடம் மிரட்டி பணம் மற்றும் பொருட்களை பறித்து வந்தது தெரியவந்தது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.