தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுm இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றை ஒட்டி இருக்கும் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில், குளிக்கவும் ஆற்றை கடக்கவும் கூடாது என தடை போடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.