நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நாளை (20.12.2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக நெல்லை ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தற்போது தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.