ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் 9-வது தெருவில் மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு விடுதி காப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் சீர் மரபினர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் காப்பாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மணிமொழியும், கிருஷ்ணவேணியும் வேலைக்கு சென்ற பிறகு மணிமொழியின் தாய் 82 வயது மூதாட்டி கோவிந்தம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் மூதாட்டியின் வாயை பொத்தி மிரட்டி 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ரிஷிகேஷ் என்பவரை கைது செய்தனர். அவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்தபோது ரிஷிகேஷ் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து தங்க சங்கிலியை மீட்டனர்.